Date:

12 மணி நேர நீர் வெட்டு

மின்சார சபையின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளை முன்னிட்டு பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான நீர்விநியோகம் தடைப்படுவதனால் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப 9.00 தொடக்கம் இரவு 9.00 மணி வரையிலான 12 மணி நேர நீர் வெட்டு பின்வரும் பகுதிகளில் அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பை சபை அறிவித்துள்ளது

அதன்படி பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ நகரசபைகள் மற்றும் களனி, பியகம, மஹர, தொம்பே, கந்தான, மினுவங்கொடை பிரதேச சபை பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபை நிர்வாக எல்லையின் சில பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுலாக்கப்படும்.

இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவலை தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.amazon college and campus

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி அன்பளிப்பு

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும்...

இலவங்கப்பட்டை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டு 260 மில்லியன் டொலர் வருமானம்

இலவங்கப்பட்டை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த ஆண்டில் 260 மில்லியன்...

இந்துக் கல்லூரி கொழும்பு ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலய எண்ணெய்க் காப்பு திருவிழா

தலைநகரின் கல்விப் பாரம்பரியத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இந்துக் கல்லூரி...

2027 வரை சம்பள அதிகரிப்பு இல்லை

எவர் வேலை நிறுத்தம் செய்தாலோ அல்லது வீதியில் இறங்கினாலோ மூன்றாவது சம்பள...