என்னைப் பொறுத்தவரை இந்த ஜனாதிபதித் தேர்தல் எனக்கு ஒரு போட்டி இல்லை. நான் யாரிடமும் சண்டையிட வரவில்லை. நான் எனது கொள்கைகளுடன் வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடக பிரதானிகளுன் கொழும்பில் தற்போது நடைபெறும் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்
உண்மையைச் சொல்லி நாட்டைக் காப்பாற்றத் தயாரா அல்லது பொய்யைக் கூறி நாட்டைக் குழப்பத் தயாரா என்பதைச் சிந்திக்க வேண்டும்.
நீங்கள் விரும்பினால் எனக்கு வாக்களியுங்கள். இதை முன்னெடுத்துச் செல்வேன் என்றார்.
நான் மற்றவர்களைப் போல வாக்குறுதிகளை அளிப்பதில்லை. செய்து காட்டியுள்ளேன். ஏனையோர் வாக்குறுதிகளை வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.