Date:

பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு விலை அதிகரிக்கும் சாத்தியம்

பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து என்பவற்றின் விலையை அதிகரிப்பு தொடர்பில் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விலை அதிகரிப்பு தொடர்பிலான யோசனை, நுகர்வோர் அதிகார சபையினால் அண்மையில் கூடிய வாழ்க்கை செலவுக் குழுவிடம் முன்வைக்கப்பட்டது.

இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாயாலும், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாயாலும், சீமெந்து ஒரு மூடையின் விலையை 50 ரூபாயாலும் அதிகரிக்க வாழ்க்கை செலவுக் குழு யோசனை முன்வைத்துள்ளது.

மேலும், சமையல் எரிவாயுவின் விலையை 550 ரூபாயால் அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. எவ்வாறாயினும், இது தொடர்பான இறுதி முடிவு இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின்போது எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் காணொளி ஊடாக அமைச்சரவை கூட்டம் இன்று (27) பிற்பகல் இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிஐடியில் முன்னிலையானார் அர்ச்சுனா

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை...

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின்

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின் இவர். பெயர் சலீம் முஹ்சீன். பசி,...

முழுமை பெறாத காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் – சர்வதேசமயமாகப்பட வேண்டும் – ரவூப் ஹக்கீம்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி. முழுமை பெறாமலிருக்கின்ற காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள்...

🕌 35வது தேசிய ஷுஹதாக்கள் தினம் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு..

1990ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் திகதி, காத்தான்குடியில் இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த...