Date:

ஹக்கீம் அதிரடி: ஒருவரை வெளியேற்றினார்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டம் ஞாயிற்றுக்கிழமை(4) கட்சியின் தலைமையமான தாருஸ்ஸலாத்தில் நடைபெற்றது.

லுஹர் தொழுகைக்கான  அதான் ஒலித்த வேளையில், கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த சந்தர்ப்பத்தில், பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் எடுத்திருந்த

படங்களை  முகநூலில் பதிவேற்றம் செய்தது ,  விஷமிகளுக்கு கட்சியை அநாகரிகமாக முகநூலில் விமர்சிக்க இடமளித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளினால்  கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம்  ,அவரை  கூட்டத்திலிருந்து வெளியேற்றுவதாக அறிவித்தார் .

கட்சியின் தலைவர் ஹக்கீம் உடனடி நடவடிக்கையாக யஹியாகானை  நடைபெற்று கொண்டிருந்த உயர்பீட கூட்டம் மற்றும் அடுத்த உயர்பீட கூட்டம் ஆகிய இரு அமர்வுகளில்  பங்குபற்றகூடாது என இடைநிறுத்துவதாக குறிப்பிட்டார்.

கட்சியில் யஹியாகானுடைய வகிபாகம் பற்றி  பாராட்டியதோடு , இந்த முடிவை மனவருத்ததோடு எடுக்கவேண்டிய நேர்ந்தது பற்றியும் தலைவர்  தெரிவித்தார்.

தலைவரின் முடிவுக்குக் கட்டுப்பட்டு,    அவருடன்                        கைகுலுக்கி ,  முன்மாதிரியான முறையில் யஹியாகான்  அங்கிருந்து வெளியேறிச் சென்றார்.

amazon college and campus

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஏப்ரல் 15 அரச விடுமுறை தினமா?

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பது குறித்து...

தேசபந்து நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டார்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு...

படலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று!

படலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று (10) இடம்பெறவுள்ளது.   ஏப்ரல்...

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி…

மத்திய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி,...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373