Date:

முட்டை இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி

இலங்கை அரச வர்த்தக (பலநோக்கு) கூட்டுத்தாபனத்தால் இதுவரைக்கும் 224 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 2024.03.18 அன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரமே முட்டை இறக்குமதி செய்யப்பட்டன.

அவற்றில் 95 சத வீதமானவை லங்கா சதொச விற்பனை வலையமைப்பின் மூலம் 37 ரூபாவுக்கு நுகர்வோருக்கு விற்கப்பட்டது. முட்டை இறக்குமதிக்காக  வழங்கப்பட்டுள்ள காலப்பகுதி 2024.04.30 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.

அதற்கமைய, எதிர்வரும் ரமழான் மற்றும் நத்தார் கொண்டாட்டக் காலங்களில் சந்தையில் முட்டை விலையை நிலைப்படுத்துவதற்காகவும், கேக் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளுக்குத் தேவையான முட்டைகளை விநியோகிப்பதற்குத் தேவைiயான முட்டைத் தொகையை இறக்குமதி செய்வதற்கு அங்கீகாரம்  வழங்கப்பட்டுள்ளது.

வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  amazon college and campus

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கம்பஹாவின் பல பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...

நாளை முதல் தேசிய விபத்து தடுப்பு வாரம் பிரகடனம்

தேசிய விபத்து தடுப்பு வாரத்தை அறிவிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி,...

தென்னிலங்கையில் விசேட சோதனை – 457 பேர் கைது

காலி, மாத்தறை மற்றும் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் நேற்று (05) இரவு...

ஒன்றரை கோடி பெறுமதியான மதுபானம் மற்றும் ஏலக்காய் பறிமுதல்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஒரு கோடியோ 50 லட்சம் பெறுமதியான மதுபானம்...