Date:

மொட்டு இரண்டாக பிளந்தது; யானை தூக்கிய எம்பிக்கள் சிலரின் விபரம் இதோ!

எதிர்வரும் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவை தெரிவிப்பதாக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழு இணக்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவுக்கும் இடையில்  (29) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இந்த கலந்துரையாடலுக்கு மஹிந்தானந்த அளுத்கமகே, திலும் அமுனுகம, காஞ்சன விஜேசேகர, எஸ். பீ திஸாநாயக்க, லொஹான் ரத்வத்த, கீதா குமாரசிங்க, அலி சப்ரி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்   உயர்பீடக் கூட்டத்தின் பின்னர், இந்த கலந்துரையாடலுக்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகை தந்துள்ளதுடன், இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் உட்பட ஏறக்குறைய 70 பேர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டு அலுவலகத்தில் ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

amazon college and campus

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கடத்தப்பட்ட பாடசாலை சிறுவன், வெள்ளை வேனில் இருந்து குதித்து தப்பி வந்தான்

கஹதுடுவ பகுதியில் வைத்து வெள்ளை வேனில் கடத்தப்பட்ட  15 வயதுடைய சிறுவன்...

இலங்கையின் ஏற்றுமதிகளில் 70 முதல் 80 சதவீதம் வரை வரிகள் இல்லாமல்

இலங்கையின் ஏற்றுமதிகளில் 70 முதல் 80 சதவீதம் வரை வரிகள் இல்லாமல்...

புதிய கல்விச் சீர்திருத்தம் – வரலாறு, அழகியல், தொழில்சார் பாடங்கள்..

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி...

City of Dreams Sri Lanka ஆரம்ப விழா சிறப்பு விருந்தினர் பங்கேற்பில் திடீர் மாற்றம்

தெற்காசியாவின் முதலாவது ஒருங்கிணைந்த உல்லாச விடுதியான City of Dreams Sri...