Date:

பாக்.பழங்குடியினரிடையே மோதல் 36 பேர் பலி; 160 பேர் காயம்

amazon college and campusபாகிஸ்தானில் இரண்டு பழங்குடியின மக்களிடையே ஏற்பட்ட மோதலில், 36 பேர் கொல்லப்பட்ட நிலையில் 160 பேர் காயமுற்றனர்.

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லைப்பகுதியான ஹைபர் பதுன்காவா மாகாணத்தில் போஷேரா கிராமம் உள்ளது. இங்கு தான், கடந்த 5 நாட்களாக மோதல்கள் நடந்து வருகின்றன.

போஷேரா, மலிகேல் (Malikhel), தண்டர் (Dandar) உள்ளிட்ட கிராமங்களில் வசித்துவரும் இஸ்லாமின் ஷியா பிரிவைச் சேர்ந்த பழங்குடியினருக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த பழங்குடியினருக்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் நிகழ்ந்துவந்துள்ள நிலையில், நிலத்தகராறு காரணமாக இரு குழுக்களிடையிலும் வன்முறை வெடித்துள்ளது.

இந்நிலையில், நேற்றிரவு இடம்பெற்ற மிகப்பெரிய தாக்குதல்களில் 36 பேர் உயிரிழந்த நிலையில், 162 பேர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கலவரத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வர பொலிஸார் தொடர்ந்து முயன்று வரும் போதிலும், இந்த வன்முறையானது மேல் குர்அம் மாவட்டத்தின் மற்றப் பகுதிகளுக்கும் பரவி உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வெலிகம கொலையாளி தொடர்பில் முக்கிய தகவல்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவத்தில் சந்தேக...

இன்றும் குறைந்த தங்கம் விலை!

இலங்கையில் தங்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகின்றது. அந்த வகையில்...

வெலிகம சம்பவம்: எதிரணி கறுப்பு எதிர்ப்பு

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் 'மிடிகம லாசா' என்றழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர...

விசேட பண்ட வரி;கிழங்கு வெங்காயம் விலைகள் பாரிய அளவில் அதிகரிக்கும் சாத்தியம்

பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கிற்கான விசேட பண்ட வரியை அதிகரிக்க...