Date:

ஹபராதுவயில் பின்தொடர்ந்த வண்ணமே துப்பாக்கி பிரயோகம் ; இருவர் வைத்தியசாலையில்

ஹபராதுவ பகுதியில் உள்ள விகாரையொன்றுக்கு அருகில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பேர் சிகிச்சைகளுக்காகக் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கி பிரயோகம் நேற்றிரவு நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹருமல்கொட பகுதியிலுள்ள வாடிவீட்டிற்கு முன்பாக நின்றுக்கொண்டிருந்த ஒருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த அடையாளம் தெரியாத இருவரே இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் முதலில் காயமடைந்த நபரை முச்சக்கரவண்டியில் ஏற்ற முயற்சித்த வேளையில், மீண்டும் துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது.

இதன்போது, முச்சக்கரவண்டி சாரதியும் துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்துள்ளார்.

எனினும், காயத்தையும் பொருட்படுத்தாது, முச்சக்கரவண்டி சாரதி, முச்சக்கரவண்டியை வைத்தியசாலை நோக்கி செலுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள் விலைகளில் திருத்தம்

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, இன்று (31) நள்ளிரவு 12.00...

அமைச்சரானார் மொஹமட் அசாருதீன்!

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான...

STC முன்னாள் தலைவர் கைது

இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹுஸைன் அஹமட்...

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக, உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் என்ற போலிக்காரணத்தின்...