Date:

பாடசாலைகள் திறக்கப்பட்டதன் பின்னர் செயன்முறைப் பரீட்சைகள் இடம்பெறும்

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டன.

கொவிட்-19 பரவல் காரணமாக, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின், அழகியல் பாடநெறிக்கான செயன்முறைப் பரீட்சைகள் இடம்பெற்றிருக்கவில்லை.

எனவே, செயன்முறைப் பரீட்சைகள் தவிர்ந்த ஏனைய பாடநெறிகளுக்கான பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பாடசாலைகள் திறக்கப்பட்டதன் பின்னர், செயன்முறைப் பரீட்சைகள் நடத்தப்பட்டு, அதன் பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும், எதிர்வரும் 2 தினங்களுக்குள் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், மீள் திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கும் காலம், பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

அழகியல் பாடநெறியின் செயன்முறைப் பரீட்சைகளுடன் பெறுபேறுகள் வெளியிடப்படாத மாணவர்கள், உயர்தரத்திற்கு அனுமதி பெறுவதற்கான ஆகக்குறைந்த தகைமைகள் அடங்கிய விசேட சுற்றறிக்கை கல்வி அமைச்சின் மூலம் எதிர்காலத்தில் வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கொழும்பில் போராட்டம்

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காமையினால், இன்று (02) முற்பகல்...

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பம்

வாக்காளர் பெயர்ப்பட்டியல் திருத்தப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன்,...

பாரம்பரியம் மிளிர அரங்கேறிய லயன்ஸ் மாவட்ட 306 D3-இன் “தைப்பொங்கல் விழா 2026”

லயன்ஸ் சர்வதேச மாவட்ட 306 D3 இன் ஏற்பாட்டில், தமிழர்களின் பாரம்பரிய...

மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த வௌ்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் சுமார் 200...