Date:

பாடசாலைகள் திறக்கப்பட்டதன் பின்னர் செயன்முறைப் பரீட்சைகள் இடம்பெறும்

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டன.

கொவிட்-19 பரவல் காரணமாக, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின், அழகியல் பாடநெறிக்கான செயன்முறைப் பரீட்சைகள் இடம்பெற்றிருக்கவில்லை.

எனவே, செயன்முறைப் பரீட்சைகள் தவிர்ந்த ஏனைய பாடநெறிகளுக்கான பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பாடசாலைகள் திறக்கப்பட்டதன் பின்னர், செயன்முறைப் பரீட்சைகள் நடத்தப்பட்டு, அதன் பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும், எதிர்வரும் 2 தினங்களுக்குள் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், மீள் திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கும் காலம், பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

அழகியல் பாடநெறியின் செயன்முறைப் பரீட்சைகளுடன் பெறுபேறுகள் வெளியிடப்படாத மாணவர்கள், உயர்தரத்திற்கு அனுமதி பெறுவதற்கான ஆகக்குறைந்த தகைமைகள் அடங்கிய விசேட சுற்றறிக்கை கல்வி அமைச்சின் மூலம் எதிர்காலத்தில் வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் உயர்வு!

பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,...

BREAKING அமெரிக்காவுடன் எந்தவொரு உரையாடலிலும் நாம் ஈடுபடவே இல்லை! – ஈரானிய அரச ஊடகங்கள்

“மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் எங்கள் இலக்குகளாக...

ஈரான் மீதான தாக்குதல்களை திடீரென ஒத்திவைத்த டிரம்ப்! ;தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை

ஈரானுடன் அமெரிக்கா ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதன் காரணமாக அந்நாட்டின் மின்...

பாண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...