Date:

சிறுவர்களுக்கான கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்

நாட்பட்ட நோய்களையுடைய சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகள் கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இன்றுமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

சிறுவர் நோயியல் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனிய இதனைத் தெரிவித்துள்ளார்.

அறிவாற்றல் குறைந்த, நீரிழிவு, நரம்பியல் நோய்கள், சிறுநீரக பாதிப்பு, இதயநோய், தலசீமியா, சிறுநீர் மற்றும் உணவுக் குழாய் பாதிப்புகள் உள்ளிட்ட நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களை, இந்தத் தடுப்பூசி செலுத்தலுக்காக அழைத்துவருமாறும்  பெற்றோர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி, 12 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட, நாட்பட்ட நோய்களையுடைய சிறுவர்களுக்கு முதற்கட்டத் தடுப்பூசி செலுத்தல் இடம்பெறும்.

15 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட, ஆரோக்கியமான சிறுவர்களுக்கு, அடுத்தகட்டமாகத் தடுப்பூசி செலுத்தப்படும்.

இந்த நடவடிக்கை, வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அத்துடன், 12 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தல் வேலைத்திட்டம், மூன்றாவது படிமுறையாக, விசேட வைத்திய நிபுணர்களின் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றவுடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking விபத்தில் இராணுவ சிப்பாய்கள் உட்பட 22 பேர்…

நிட்டம்புவ - கிரிந்திவெல வீதியில் திங்கட்கிழமை (21) காலை இடம்பெற்ற விபத்தில்...

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்.   88 வயதான பாப்பரசர்,...

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.   கடந்த...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373