Date:

சிறுவர்களுக்கான கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்

நாட்பட்ட நோய்களையுடைய சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகள் கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இன்றுமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

சிறுவர் நோயியல் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனிய இதனைத் தெரிவித்துள்ளார்.

அறிவாற்றல் குறைந்த, நீரிழிவு, நரம்பியல் நோய்கள், சிறுநீரக பாதிப்பு, இதயநோய், தலசீமியா, சிறுநீர் மற்றும் உணவுக் குழாய் பாதிப்புகள் உள்ளிட்ட நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களை, இந்தத் தடுப்பூசி செலுத்தலுக்காக அழைத்துவருமாறும்  பெற்றோர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி, 12 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட, நாட்பட்ட நோய்களையுடைய சிறுவர்களுக்கு முதற்கட்டத் தடுப்பூசி செலுத்தல் இடம்பெறும்.

15 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட, ஆரோக்கியமான சிறுவர்களுக்கு, அடுத்தகட்டமாகத் தடுப்பூசி செலுத்தப்படும்.

இந்த நடவடிக்கை, வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அத்துடன், 12 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தல் வேலைத்திட்டம், மூன்றாவது படிமுறையாக, விசேட வைத்திய நிபுணர்களின் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றவுடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் உயர்வு!

பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,...

BREAKING அமெரிக்காவுடன் எந்தவொரு உரையாடலிலும் நாம் ஈடுபடவே இல்லை! – ஈரானிய அரச ஊடகங்கள்

“மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் எங்கள் இலக்குகளாக...

ஈரான் மீதான தாக்குதல்களை திடீரென ஒத்திவைத்த டிரம்ப்! ;தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை

ஈரானுடன் அமெரிக்கா ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதன் காரணமாக அந்நாட்டின் மின்...

பாண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...