Date:

திகன கலவர விசாரணை அறிக்கை எங்கே?

முஸ்லிம்மக்களுக்கு எதிரான திகன கலவரம் இடம்பெற்று 6 வருடங்கள் கடந்துள்ள போதும் அது தொடர்பான விசாரணை அறிக்கை இன்னும் வெளியிடப் படவில்லை.எனவே இது தொடர்பாக தேடிப்பார்த்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) விசேட கூற்றொன்றை முன்வைத்தே இவ்வாறு வலியுறுத்திய அவர் தொடர்ந்து கூறுகையில்,

முஸ்லிம்மக்களுக்கு எதிராக 2018இல் திகன கலவரம் இடம்பெற்று 6 வருடங்கள் கடந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழு இது தொடர்பில் விசாணை மேற்கொண்டது. ஆனால் கலவரம் இடம்பெற்று 6 வருடங்கள் கடந்துள்ள போதும் அது தொடர்பான விசாரணை அறிக்கை இன்னும் வெளியிடப் படவில்லை.

எனவே அரசியலமைப்பு பேரவையின் தலைவர் என்ற வகையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இந்த விசாரணை அறிக்கை தொடர்பாக தேடிப்பார்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தோல்வி அடைந்த புத்தளம் மாநகர சபையின் முதல் வரவு செலவுத் திட்டம்!

புத்தளம் மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் இன்று...

நுவரெலியாவுக்கு இரவு நேர பயணம் வேண்டாம்!

நுவரெலியாவுக்குள் பிரவேசிக்கும் எந்தவொரு வீதியிலும் இரவு வேளையில் வாகனங்களைச் செலுத்த வேண்டாம்...

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகினி்றது. இன்று (12) நிலவரப்படி,...

25,000 ரூபாய் நிவாரணம் கிடைக்கவில்லை : மாணவன் முறைப்பாடு

அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 25,000 ரூபாய் கொடுப்பனவு, வெள்ளத்தில் சிக்குண்ட தமது வீடு...