Date:

அத்துருகிரிய துப்பாக்கி சூடு சம்பவம்- டுபாயிலிருந்து வந்த…

டுபாயிலிருந்து கிடைத்த குத்தகையொன்றுக்கு அமையவே, சுரேந்திர வசந்த பெரேராவை (கிளப் வசந்த) தனது பச்சை குத்தும் அழகு நிலைய திறப்பு விழாவிற்கு அழைத்ததாக, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணை நடாத்திய போதே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, பச்சை குத்தும் அழகு நிலைய உரிமையாளரின் வங்கி கணக்கிற்கு, டுபாயிலிருந்து 10 லட்சம் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுரேந்திர வசந்த பெரேராவை (கிளப் வசந்த) கொலை செய்வதற்கு தான் உதவி புரிந்ததாக பச்சை குத்தும் அழகு நிலைய உரிமையாளர் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கொலை சம்பவத்தின் பின்னணியில், கஞ்சிபானி இம்ரான் உள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மோந்தா புயல் சூறாவளியாக வலுப்பெறுகிறது

வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. மோந்தா என்ற இந்த புயல் நாளை காலை சூறாவளியாக வலுப்பெற்று, மாலையில் ஆந்திரப் பிரதேச கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோந்தா புயல் காரணமாக இந்தியாவின் தமிழ்நாட்டில் இன்று பலத்த மழை பெய்யும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

வெலிகம தவிசாளரின் பூதவுடலுக்கு சஜித் இறுதி அஞ்சலி

வெலிகம பிரதேச சபையில் பொது மக்கள் தினத்தன்று இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் படுகொலை...

வெலிகம துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும்...

பிக் டிக்கெட் வென்ற இலங்கையர்

அபுதாபி வாராந்திர பிரபலமான பிக் டிக்கெட் குழுக்களில் 63 வயதான வங்கியாளரான...