Date:

அக்னியுடன் சங்கமித்தார் சம்பந்தன் (PHOTOS)

இலங்கை தமிழரசு கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடல், திருகோணமலையில் தகனம் செய்யப்பட்டது.

திருகோணமலையிலுள்ள அன்னாரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பூதவுடலுக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கருத்துரைத்தார்.

கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் நாட்டை பிளவுப்படுத்துவதற்கு இரா. சம்பந்தன் ஒரு போதும் உடன்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரிக்கப்படாத இலங்கையில் அதிகாரப் பகிர்வுக்கே எப்போதும் அவர் அர்ப்பணிப்புடன் இருந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அன்னாரது பூதவுடல் சற்று முன்னர் அக்னியுடன் சங்கமமானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...