Date:

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் குறைப்பு

இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 11 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலையாக 344 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 41 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலையாக 379 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு லீட்டர் சுப்பர் டீசலின் விலை 22 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலையாக 355 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

செம்மணி 3ஆம் கட்ட அகழாய்வு 2026 இல்

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே...

விரிவுரையாளரின் பாலியல் வன்கொடுமை: சுயாதீன விசாரணை

விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல்...

கைதான முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்கழுவினால் கைது செய்யப்பட்டிருந்த இரண்டு முன்னாள் சிரேஸ்ட...

கடல்சார் ஒத்துழைப்புக்கு சவூதியுடன் பேச்சு

கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை...