Date:

கல்விசாரா ஊழியர்கள் இன்றும் நாளையும் சுகயீன விடுமுறையில்

நாட்டின் சில பிரதேசங்களில் கல்விசாரா ஊழியர்கள் இன்று (24) மற்றும் நாளையும் (25) சுகயீன விடுமுறையை அறிவித்து சேவையிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கல்விசாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி கண்டி மாவட்டத்திலும் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் இன்று இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்விசாரா சேவைக்கான தேசிய கொள்கையை தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்கம் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே திலகரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் 26ஆம் திகதி நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிபர் சேவைகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சிசிர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பொசன் விடுமுறைக்கு பின்னர் இன்று முதல் அரசாங்க பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் என கல்வி அமைச்சு நேற்று விசேட அறிவிப்பை வௌியிட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தாக்கப்பட்ட கொழும்பு மாநகர சபை பெண் உறுப்பினர் வைத்தியசாலையில்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தைத்...

’’ஈரான் ராணுவத் தளபதி கொல்லப்பட்டார்’’-இஸ்ரேல்

தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், ஈரானிய உச்சத்...

திடீரென நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி! எதிர்க்கட்சி அதிரடியாக வெளிநடப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்றையதினம் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.   நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி...

கற்பிட்டி பிரதேச சபை தலைவர் மீது தாக்குதல்

மதுரங்குளிய விருதோடை பகுதியில் கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் மற்றும் ஒரு...