Date:

இலங்கையில் கடன் கொடுக்கும் புதிய வங்கி

இலங்கையில் முதன்முறையாக நடைபெற்று வரும் சர்வதேச கைத்தொழில் கண்காட்சி 2024 (International Industry Expo 2024) இன் ஆரம்ப நிகழ்வில் நேற்று (19) கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்நாட்டின் பொருளாதாரத்தை ஆதரிக்கும் மக்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காக புதிய அபிவிருத்தி வங்கியை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்த செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு பொருளாதார ஆணைக்குழுவொன்றை நியமித்து நாட்டின் பொருளாதாரத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் மக்களை பலப்படுத்தும் வகையில் “எண்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” என்ற புதிய நிறுவனத்தை ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள கைத்தொழில்துறையினரையும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களையும் குறைந்த வட்டியில் கடன்களை வழங்கி ஊக்குவிப்பது அரசாங்கத்தின் விருப்பமாகும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கந்தானை நக‌ரி‌ல் முழு நிர்வாணமாக சைக்கிள் ஓட்டிய நபர்

பிரதான வீதியின் நடுவில் முற்றிலும் நிர்வாணமாக சைக்கிளில் செல்லும் ஒரு நபர்...

15 முறை பறக்கும் பலே கில்லாடி 35 கடவுச்சீட்டுகளுடன் சிக்கினார்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு...

சிஐடியில் முன்னிலையானார் அர்ச்சுனா

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை...

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின்

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின் இவர். பெயர் சலீம் முஹ்சீன். பசி,...