Date:

வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட இலங்கை அணி

அமெரிக்கா – புஃலோரிடா பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக, இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு இன்று விஜயம் மேற்கொள்ளவிருந்த நிலையில், வெள்ளப் பெருக்கு காரணமாக இலங்கை அணிக்கு புஃலோரிடாவை விட்டு வெளியேற முடியவில்லை என அறிய முடிகின்றது.

புஃலோரிடா ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலை காரணமாக பல விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால், இலங்கை அணி நாளை (14) மேற்கிந்திய தீவுகளை நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அணி T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் சுற்றில் போட்டியிடும் இறுதி போட்டி நெதர்லாந்து அணிக்கு எதிராக 17ம் திகதி மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின் கட்டண திருத்தம் இன்று அறிவிப்பு

இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த இறுதித்...

19 கிரிக்கெட் வீரர்கள் உடற்தகுதி தேர்வில் தோல்வி

நிறைவடைந்த டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை வீரர்கள் தொடர்ச்சியாக...

Breaking இஸ்ரேல் இரசாயன ஆலை மீது ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்!  நச்சுக்கசிவு அச்சத்தில் மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்! 

"வெறும் குண்டுவீச்சு மட்டுமல்ல... இது ஒரு இரசாயனப் பேரழிவுக்கான எச்சரிக்கை!"  தெற்கு...

எரிபொருள் ஏற்றுமதியை தடை செய்கிறது ரஷ்யா

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள...