Date:

குளியாபிட்டிய இளைஞன் கொலை – காதலி கைது

குளியாபிட்டிய பகுதியில் இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்வதற்கு ஆதரவு வழங்கியமை மற்றும் குற்றத்தை மறைத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிகின்றனர்.

வலஸ்முல்ல – இழுக்ஹின்ன பகுதியைச் சேர்ந்த 18 வயதான யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குளியாபிட்டிய பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், தனத காதலியை சந்திப்பதற்காக கடந்த 22ம் திகதி வலஸ்முல்ல பகுதிக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார்.

 

இவ்வாறு காணாமல் போன இளைஞனின் சடலம் பல நாட்களின் பின்னர் சிலாபம் – மாதம்பை பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த காதலியின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜெய்சங்கரை சந்தித்தார் பிரதமர் ஹரிணி

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, புதுடெல்லியில் இந்திய வெளியுறவு...

காய்கறிகளின் மொத்த விலை குறைந்தது

தம்புள்ளை சிறப்பு பொருளாதார மையத்தில் அதிக அளவு காய்கறிகள் கையிருப்பில் உள்ளதாலும்,...

அரச பொறியியல் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளருக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட அரச பொறியியல்...

சுங்கம் தடுத்துள்ள வாகனங்களை விடுவிப்பது குறித்த அறிவிப்பு

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...