Date:

மரத்தில் ஏறிய தங்க வளையல்

வீடொன்றில் திருடப்பட்ட 1,40,000 ரூபாய் பெறுமதியான தங்க வளையல், 40 அடி உயர தென்னை மரத்தின் உச்சியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த  நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் இளைஞன் ஒருவரையும் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

பதுளை, மெதபத்தனை பகுதியில்  வீடொன்றில் யாரும் இல்லாதபோது ஜன்னலை உடைத்து உள் புகுந்து  தங்க வளையல் ஒன்றையும்,  37,000 ரூபாய்  பணத்தையும் திருடிச்சென்றுள்ளதாக பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற  தகவலொன்றிக்கமைய  விசாரணைகளை மேற்கொண்ட  பொலிஸார்  22 வயதுடைய  இளைஞன்  ஒருவரை  கைது  செய்துள்ளனர் .

அவரிடம் மேற்கொண்ட விசாரணையின்  போது திருடப்பட்ட பணத்தை தான் செலவிட்டதாகவும் தங்க வளையலை , தென்னை மரத்தின் உச்சியில் மறைத்து வைத்துள்ளதாகவும்  பொலிஸாரிடம்  தெரிவித்துள்ளார் .

மேலும்,  இச்சம்பவம்  தொடர்பிலான  மேலதிக  விசாரணைகளை  பொலிஸார்  மேற்கொண்டு வருவதாக  தெரிவித்துள்ளனர் .

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விடைபெறும் லசித் மலிங்க!

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக லசித் மலிங்கவின் ஒப்பந்தம்...

நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்

நுவரெலியாவில் நிலவும் மாறுபட்ட காலநிலை காரணமாகவும் ஞாயிறு வார விடுமுறை என்பதாலும்...

பங்களாதேஷை T20 உலகக்கிண்ணத்திலிருந்து நீக்கிய ICC!

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா செல்லப்போவதில்லை என பங்களாதேஷ் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, 2026...

83வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வரலாற்று இரட்டை வெற்றியை வென்ற இலங்கை விமானப்படை!

83வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2025, கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில்...