இலங்கை மனித உரிமை மன்றத்தினால் கடந்த (10) திகதி புத்தளம் நகர மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சுமார் 200 வரிய மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு கொழும்பு தலைமை காரியாலயத்தின் தலைவர் உட்பட சுமார் 18 உறுப்பினர்கள் வருகை தந்து இந்த நிகழ்வை சிறப்பித்தனர்.

மனித உரிமை மன்றத்தின் தலைவர் திரு B.M முர்ஷிதீன் அவர்களும், பிரதி தலைவர் இல்ஹாம் மரிக்கார் அவர்களும் விசேட உரையாற்றினர்.

இந்த திட்டம் வெற்றி பெறுவதற்கு மிக முக்கியமானவர் திரு இல்ஹாம் மரிக்கார் என தெரிவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் அவருக்கு பொன்னாடையும் போற்றி கௌரவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இந்த அமைப்பின் புத்தளம் கிளை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது.
இந் நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதற்கு ஒத்தாசை புரிந்த I – Soft Campus, CBS Foundation, Amazon Campus அகிய நிறுவனங்களுக்கு இலங்கை மனித உரிமை மன்றத்தினால் நன்றிகள் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



