Date:

அமரர். ஆறுமுகன் தொண்டமானின் ஓராண்டு நினைவுத்தினம் அனுஸ்டிப்பு

இ.தொ.காவின் மறைந்த தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் ஓராண்டு நினைவுத்தினம் இன்று கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் இ.தொ.கவின் பொதுச் செயலளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டது.
நிகழ்வில் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக சி.எல்.எப் காரியாலயத்தில் உள்ள அன்னாரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது அமரர். ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக பிராஜாசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமியின் ஏற்பாட்டில் 50 ஆயிரம் மரக்கன்றுகளை நாட்டும் நிகழ்வு “பிரஜா விருட்சம்” எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்றது.
முதற் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் அமைச்சர் உட்பட இ.தொ.காவின் இளைஞர் அணியின் தலைவர் ராஜமணி பிரசாத், செயலாளர் அர்ஜூன் ஜெயராஜ் மற்றும் சில முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்த வருடத்திற்குள் 50 ஆயிரம் மரக்கன்றுகளை நாட்டும் நிகழ்வு எதிர்வரும் நாட்களில் மலையகத்தின் பல பகுதிகளிலும் இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட...

‘டித்வா’ அனர்த்தம் | மாற்றுக் காணி வழங்கும் திட்டம்!

'டித்வா' புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்துக் கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்குக்...

50 மி.மீக்கும் அதிக மழை

இன்று (13) வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல்...

அசோக ரன்வல பிணையில் விடுவிப்பு

சப்புகஸ்கந்த பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது...