Date:

இலங்கையர் பலர் டுபாய் பொலிஸாரால் கைது

பெலியத்தவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு ஆதரவளித்த சிலர் டுபாயில் அந்நாட்டு பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஊரகஹா மைக்கல், புஸ்ஸே ஹர்ஷ மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இருவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்நாட்டில் உள்ள ஒரு இரவு விடுதியில் நடந்த மோதலின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது,13 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட 13 பேரும் பெலியத்தவில் ஐந்து பேரின் கொலைக்கு தலைமை தாங்கியதாக சந்தேகிக்கப்படும் கொஸ்கொட சுஜீயின் நெருங்கிய உதவியாளர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது கொஸ்கொட சுஜீ குறித்த குழுவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.

எனினும், இந்த கைது தொடர்பாக டுபாய் இராச்சியம் இதுவரை அதிகாரபூர்வமாக இலங்கை அரசுக்கு அறிவிக்கவில்லை.

சந்தேக நபர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இரு நாட்டு பாதுகாப்பு தரப்பினரும் கலந்துரையாடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எம்பியாக பதவியேற்றார் கமல்ஹாசன் :மகள் உட்பட பலர் வாழ்த்து !

உலகநாயகனும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் ராஜ்யசபா...

மாலைதீவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலைதீவு தலைநகர் மாலேவுக்கு சென்றார். அங்கு...

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்: கம்போடியா உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு

தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, கம்போடியா உடனடி போர்நிறுத்தத்திற்கு...

முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் வட, கிழக்கு இணைப்பில்லை – அபூர்வ ஆளுமை கொண்ட இரா.சம்பந்தன் ஐயாவின் நிலைப்பாடு

முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் வட, கிழக்கு இணைப்பில்லை - அபூர்வ ஆளுமை கொண்ட...