Date:

முன்பள்ளிகளில் மீண்டும் கொரோனா பரவல்

சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள முன்பள்ளியொன்றிலிருந்து மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது.

கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் குறித்த முன்பள்ளியில் 100 கொரோனா நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இந்த முன்பள்ளியில் கல்வி பயிலும் மாணவி ஒருவரின் தந்தைக்கு முன்னதாக கொரோனா தொற்று உறுதியானது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தொற்று உறுதியான மாணவியின் தந்தை கடந்த ஒகஸ்ட் 4ஆம் திகதி சிங்கப்பூரில் இருந்து சீனாவுக்கு திரும்பியிருந்தார்.

இதனையடுத்து அவர் 21 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில், அதன்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கொவிட்-19 தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.

எனினும், 38 நாட்களின் பின்னர் அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்தநிலையில், முன்பள்ளி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உடனடியாக கொரோனா பரிசோதனைகளை முன்னெடுக்குமாறு சீனா சுகாதாரத்துறை அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உயர் தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு – CIDஇல் முறைப்பாடு

இம்முறை இடம்பெறும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே...

சீரற்ற காலநிலையினால் 9 பேர் பலி

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக...

திருமண பந்தத்தில் இணைந்தார் ஜீவன் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், திருமண...

நாளை முதல் மின்னணு பேருந்து கட்டணம்

பேருந்து பயணத்திற்கான மின்னணு அட்டை கட்டணங்களை அறிமுகப்படுத்தும் திட்டம் திங்கட்கிழமை (24)...