Date:

மத்திய வங்கி ஆளுநர் பதவி விலக தீர்மானம்

மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் தான் இவ்வாறு பதவி விலகவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக மத்திய வங்கி ஆளுநராக பதவி வகித்த இந்திரஜித் குமார சுவாமி தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகியதையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த 2019 டிசம்பர் 24ஆம் திகதி, பேராசிரியர் டப்ளியூ. டி. லக்ஷமன் இலங்கை மத்திய வங்கியின் 15 ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மழை நிலைமை மேலும் அதிகரிக்கும்!

இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் வளிமண்டல கீழ்த்தளத் தளம்பல்...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் சற்றுமுன்னர் கைது...

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிய ரிஷாட் பதியுதீன்!

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலஞ்ச ஊழல் விசாரணை...

இலங்கை வரும் தளபதி!

இந்திய இராணுவ தளபதி ஜெனரல் உபேந்த்ரா த்விவேதி நாளை மறுதினம் இலங்கைக்கு...