Date:

பிரதமர் – புனித பாப்பரசர் சந்திப்பு இல்லை

இத்தாலிக்கு அடுத்த வாரம் விஜயமொன்றை மேற்கொள்ளும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ,அங்கு வத்திக்கானில் புனித பாப்பரசரை சந்திக்கமாட்டாரென வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

முன்னதாக ,பிரதமர் மஹிந்த அங்கு பாப்பரசரை சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தபின்னர் , கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட்டோர் கடும் எதிர்ப்பினை வெளியிட்டனர். உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பில் நீதியான விசாரணைகள் நடக்காமல் சர்வதேசத்திற்கு அரசு தவறான விடயங்களை கூறலாமென பேராயர் ரஞ்சித் தெரிவித்திருந்தார்.

இந்த பின்னணியிலேயே பாப்பரசர் – மஹிந்த சந்திப்பு இடம்பெறாதென அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொழும்பு பேராயர் இல்லத்திலிருந்து வத்திக்கானுக்கு வழங்கப்பட்ட அழுத்தம் காரணமாக இந்த சந்திப்பு தவிர்க்கப்பட்டிருக்கக் கூடுமென்று மற்றுமொரு தகவல் தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தலை நடத்த எதிர்பார்ப்பு – பிரதமர்

மாகாண சபைகள் தேர்தலை விரைவில் நடத்துவதற்கே அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என்றும், அதற்கு...

வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன,பணியில் இருந்து இடைநீக்கம்

இலங்கை தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன, முதற்கட்ட...

அதிக மழைவீழ்ச்சி:பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன

இன்று (19) காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில்,...

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...