Date:

பிரதமர் – புனித பாப்பரசர் சந்திப்பு இல்லை

இத்தாலிக்கு அடுத்த வாரம் விஜயமொன்றை மேற்கொள்ளும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ,அங்கு வத்திக்கானில் புனித பாப்பரசரை சந்திக்கமாட்டாரென வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

முன்னதாக ,பிரதமர் மஹிந்த அங்கு பாப்பரசரை சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தபின்னர் , கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட்டோர் கடும் எதிர்ப்பினை வெளியிட்டனர். உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பில் நீதியான விசாரணைகள் நடக்காமல் சர்வதேசத்திற்கு அரசு தவறான விடயங்களை கூறலாமென பேராயர் ரஞ்சித் தெரிவித்திருந்தார்.

இந்த பின்னணியிலேயே பாப்பரசர் – மஹிந்த சந்திப்பு இடம்பெறாதென அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொழும்பு பேராயர் இல்லத்திலிருந்து வத்திக்கானுக்கு வழங்கப்பட்ட அழுத்தம் காரணமாக இந்த சந்திப்பு தவிர்க்கப்பட்டிருக்கக் கூடுமென்று மற்றுமொரு தகவல் தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக கண்டி மாவட்டத்தில் 35 பாடசாலை மாணவர்களும்...

அனர்த்தப் பகுதிகளைப் பார்வையிடுவதைத் தவிர்க்கவும்

அனர்த்தத்திற்கு உள்ளான இடங்களைப் பார்வையிடுவதற்கு வருவதைத் தவிர்க்குமாறும், அது மிகவும் ஆபத்தானது...

அபிவிருத்தி செய்யப்படும் ‘களு பாலம’

‘களு பாலம’ என அழைக்கப்படும் பேராதனை மற்றும் சரசவி உயன ரயில்...

ஹஜ் யாத்திரை அடையாள அட்டையில் புதிய விதிகள்

சவூதி அரேபியாவுக்கு ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு வழங்கப்படும், 'நுஸுக்'...