Date:

குற்றத்தை நிரூபித்தால் பதவி விலக தயார் – மஹிந்த அமரவீர

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நேற்று நாடாளுமன்றில் முன்வைத்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் தாம் பதவி விலக தயாராக இருப்பதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மாலைத்தீவில் உள்ள ஒரு தீவினை நிரப்புவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் ஒருவர் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நேற்று நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்ததாக அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

அண்மைய காலங்களில் இதற்காக சுமார் ஆறரை கியூப் மணல் இலங்கையில் இருந்து மாலைத்தீவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இதற்காக இலங்கையில் உள்ள நிறுவனம் ஒன்றினால் வரிப்பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் சாணக்கியன் நாடாளுமன்றில் தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சாணக்கியன் முன்வைத்த இந்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் அமைச்சர் பதவியை மாத்திரமல்லாது,  நாடாளுமன்ற உறுப்புரிமையையும் துறக்க தயார் என அமைச்சர் மஹிந்த அமரவீர இதன்போது தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

தற்போது நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக நாட்டில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு...

கடமைகளை பொருப்பேற்றுக்கொண்டார் பிரதி அமைச்சர் அர்கம் இலியாஸ்!

மின்சாரம் மற்றும் எரிசக்தி பிரதி அமைச்சராக அர்காம் இலியாஸ் கடமைகளை பொருப்பேற்றுக்கொண்டார். பிரதி...

யாழ்தேவி ரயிலின் தலைமை கட்டுப்பாட்டாளர் கைது

கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், 'யாழ்தேவி' ரயிலின் தலைமை...

ரொஷான் ரணதுங்க வௌ்ளிப் பதக்கம் வென்றார்

இந்தியாவில் நடைபெற்று வரும் 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று...