Date:

குற்றத்தை நிரூபித்தால் பதவி விலக தயார் – மஹிந்த அமரவீர

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நேற்று நாடாளுமன்றில் முன்வைத்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் தாம் பதவி விலக தயாராக இருப்பதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மாலைத்தீவில் உள்ள ஒரு தீவினை நிரப்புவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் ஒருவர் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நேற்று நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்ததாக அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

அண்மைய காலங்களில் இதற்காக சுமார் ஆறரை கியூப் மணல் இலங்கையில் இருந்து மாலைத்தீவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இதற்காக இலங்கையில் உள்ள நிறுவனம் ஒன்றினால் வரிப்பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் சாணக்கியன் நாடாளுமன்றில் தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சாணக்கியன் முன்வைத்த இந்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் அமைச்சர் பதவியை மாத்திரமல்லாது,  நாடாளுமன்ற உறுப்புரிமையையும் துறக்க தயார் என அமைச்சர் மஹிந்த அமரவீர இதன்போது தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தில் NPP தோல்வி? No

தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்திற்குட்பட்ட கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம்...

நவம்பரில் பணவீக்கத்தில் வீழ்ச்சி!

2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச்...

ஜூலியையும் திரும்ப அழைக்கிறார் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் "அமெரிக்கா முதலில்" நிகழ்ச்சி நிரலுடன் ஒத்துப்போகும்...

NPP எம்.பி தாக்குதல் சம்பவம்: பொலிஸார் வெளியிட்ட அறிக்கை

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார உட்பட குழுவினர்...