Date:

இலங்கைக்கு சுற்றுலா பயணங்களை மேற்கொள்பவர்களுக்கான அறிவித்தல்

பரவிவரும் கொரோனா வைரஸ் திரிபினால் ஏற்படும் அச்சுறுத்தல் காரணமாக இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதனை தவிர்க்குமாறு சீ.டி.சி எனப்படும் அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.

அந்த கட்டுப்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, ஜமேய்க்கா, ப்ரூனே ஆகிய நாடுகள் கொரோனா அச்சுறுத்தல் அதிகம் உள்ள 4 ஆம் கட்ட அபாய வலையமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த நாடுகளுக்கு சுற்றுலா மேற்கொள்வதனை தவிர்க்குமாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இலங்கைக்கு அத்தியாவசியமாக பயணம் மேற்கொள்ள வேண்டியிருப்பின் அதற்கு முன்னதாக இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன் முகக்கவசம் அணிதல், 6 அடி தூர சமூக இடைவெளி மற்றும் இலங்கை சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்களை உரிய வகையில் பின்பற்றுதல் அவசியம் எனவும் அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்று தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வெளியேறுகை எச்சரிக்கை

கண்டி, நுவரெலியா, மாத்தளை, கேகாலை, குருநாகல் மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு 3ஆம்...

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607ஆக அதிகரித்தது

இன்று மாலை 6 மணிவரையான நிலவரப்படி, இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

2026 வரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் 157 மேலதிக...

பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல்...