Date:

இலங்கைக்கு சுற்றுலா பயணங்களை மேற்கொள்பவர்களுக்கான அறிவித்தல்

பரவிவரும் கொரோனா வைரஸ் திரிபினால் ஏற்படும் அச்சுறுத்தல் காரணமாக இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதனை தவிர்க்குமாறு சீ.டி.சி எனப்படும் அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.

அந்த கட்டுப்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, ஜமேய்க்கா, ப்ரூனே ஆகிய நாடுகள் கொரோனா அச்சுறுத்தல் அதிகம் உள்ள 4 ஆம் கட்ட அபாய வலையமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த நாடுகளுக்கு சுற்றுலா மேற்கொள்வதனை தவிர்க்குமாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இலங்கைக்கு அத்தியாவசியமாக பயணம் மேற்கொள்ள வேண்டியிருப்பின் அதற்கு முன்னதாக இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன் முகக்கவசம் அணிதல், 6 அடி தூர சமூக இடைவெளி மற்றும் இலங்கை சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்களை உரிய வகையில் பின்பற்றுதல் அவசியம் எனவும் அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்று தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று இரவு தோன்றும் ‘சூப்பர் மூன்’

இந்த ஆண்டின் முதல் 'சூப்பர் மூன்' நிகழ்வு இன்று இரவு வானில்...

எதிர் வரும் நாட்களில் அதிகரிக்கும் மழை

இலங்கைக்கு கிழக்காக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை உருவாகி வருவதால்,...

கொழும்பில் தீடீர் நீர் வெட்டு

அம்பத்தலையிலிருந்து தெஹிவளைக்கு நீர் விநியோகிக்கும் பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட...

அனைவருக்கும் வசதியளிக்கும் வகையில் கிராமசேவகர் பிரிவுகளில் புதிய நடைமுறை!

நாட்டில் உள்ள கிராமசேவகர் பிரிவுகளில் மக்களுக்கு மிகவும் அவசியமான விண்ணப்பப் படிவங்களை...