Date:

இலங்கைக்கு சுற்றுலா பயணங்களை மேற்கொள்பவர்களுக்கான அறிவித்தல்

பரவிவரும் கொரோனா வைரஸ் திரிபினால் ஏற்படும் அச்சுறுத்தல் காரணமாக இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதனை தவிர்க்குமாறு சீ.டி.சி எனப்படும் அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.

அந்த கட்டுப்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, ஜமேய்க்கா, ப்ரூனே ஆகிய நாடுகள் கொரோனா அச்சுறுத்தல் அதிகம் உள்ள 4 ஆம் கட்ட அபாய வலையமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த நாடுகளுக்கு சுற்றுலா மேற்கொள்வதனை தவிர்க்குமாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இலங்கைக்கு அத்தியாவசியமாக பயணம் மேற்கொள்ள வேண்டியிருப்பின் அதற்கு முன்னதாக இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன் முகக்கவசம் அணிதல், 6 அடி தூர சமூக இடைவெளி மற்றும் இலங்கை சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்களை உரிய வகையில் பின்பற்றுதல் அவசியம் எனவும் அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்று தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தங்க விலையில் இன்றும் அதிகரிப்பு – புதிய விலை இதோ

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் உயர்ந்து வருவதன் காரணமாக இலங்கையில்...

புதிய 2,000 ரூபாய் நாணயத்தாளிலுள்ள அம்சங்கள்

நாட்டின் நடைமுறையிலுள்ள 2,000 ரூபாய் நாணயத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்களை வெளியிட்டுள்ளது. இலங்கை...

ரமழான் சிறப்பு சுற்றறிக்கை வெளியானது

வரவிருக்கும் ரமழான் காலத்தில் மத அனுஷ்டானங்களை நிறைவேற்ற பொது அதிகாரிகளுக்கு சிறப்பு...

ஹல்துமுல்லையில் கோர விபத்து: சாரதி பலி

கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று, ஹல்துமுல்லை -...