Date:

ஒருநாள் தொடர் வெற்றியைப் பதிவு செய்தது இலங்கை அணி

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி 2 க்கு 1 என வெற்றி கொண்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டி இன்று இடம்பெற்றது.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 9 விக்கெட் இழப்புக்கு 203 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

May be an image of 1 person, standing and text

இலங்கை அணி சார்பில் Charith Asalanka 47 ஓட்டங்களையும், Dhananjaya de Silva 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

204 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 30 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 125 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இதற்கமைய தென்னாபிரிக்க அணியை இலங்கை அணி 78 ஓட்டங்களினால் வீழ்த்தி வெற்றி பெற்றது.

அத்துடன், இலங்கை அணி 18 மாதங்களுக்குப் பின்னர் பெற்ற முதலாவது ஒருநாள் தொடர் வெற்றி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் போட்டியின் சிறப்பாட்டக்காரராக Dushmantha Chameera மற்றும் தொடர் நாயகனாக Charith Asalanka ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உயிரிழப்புகள் 390 ஆக அதிகரிப்பு

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை...

தெல்தோட்டைக்கு வான்வழி (ஹெலிகொப்டர்) மூலம் உலர் உணவுப் பொருட்கள்!

இன்று ஜனாதிபதி மற்றும் மாகான ஆளுநர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெல்தோட்டை பற்றி...

பலியானோர் எண்ணிக்கை 366 ஆக உயர்வு

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை...