Date:

பொலிஸாரினால் தாக்கப்பட்ட சகோதரர்கள்!

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் வைத்து கடந்த 5 ஆம் திகதி இரவு 8 மணியளவில் வவுணதீவு பொலிசாரினால் தாக்குதல் சம்பவம் ஒன்று மேற்கொள்ளப் பட்டுள்ளது.

அவசர தேவை கருதி தாண்டியடி எரிபொருள் நிலையத்தில் தனது ஊந்துருளிக்கு எரிபொருள் நிரப்பி விட்டு வீடு திரும்பிய இரு சகோதரர்கள் மீதே மோட்டார் வாகனத்தை நிறுத்தி துப்பாக்கியால் சராமாரியாக முகத்தில் தாக்குதல் நடத்தப்படுள்ளது.

காயமடைந்த இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தபட்டு முகத்தில் பல தையல்களுடன் அனுமதிக்கபட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தினேஷ் 8656 எனும் இலக்கம் உடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் நாட்டில் தனிமை படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்படுள்ள நிலையில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு முன்பள்ளி ஆசிரியர்களின் வேதனம் அதிகரிப்பு

கொழும்பு மாநகர சபையினால் நிர்வகிக்கப்படும் முன்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் மாதாந்த வேதனத்தை...

இலங்கை இளையோர் அணி அசத்தல் வெற்றி

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் சிக்ஸ் சுற்றில்,...

80 உயிர்களை நூலிழையில் காப்பாற்றிய தலவாக்கலை பஸ் சாரதி

தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடவத்த இலங்கை போக்குவரத்து சபை...

இலங்கையிலும் அதிகரித்த தங்கத்தின் விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க...