Date:

கொழும்பில் திடீர் சோதனை..! உணவகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை – 14 கடைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

கொழும்பு – மஹரகம பொது சுகாதார பரிசோதகர்களினால் கொட்டாவ மற்றும் தலவத்துகுடா பகுதிகளிலுள்ள வீதி உணவகங்களில் அவசர சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட உணவுச் சோதனையின் போது, சுகாதாரமற்ற மற்றும் தரமற்ற உணவுகளை விற்பனை செய்த  14 உணவகங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆறு உணவகங்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டதாகவும், சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

தலவத்துகொட, கிம்புலாவலயில் உள்ள 35 வீதியோர உணவு விற்பனையாளர்கள் உட்பட 55 உணவகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அங்கு மா உணவுகள், இறைச்சி மீன் உணவுகள் மற்றும் பிற உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டு பகிரங்கமாக விற்கப்படுகின்றன.

இதனால் வாகனங்களிலிருந்து வரும் தூசி மற்றும் புகை நேரடியாக வெளிப்படுவதால் உணவுகள் மாசுபடுகின்றன.

இது தவிர, சமைத்த உணவைபச்சை உணவுடன் சேர்த்து வைப்பது, துருப்பிடிக்காத இரும்புத் தட்டுகளில் இறைச்சியை வறுத்தல் ஆகியவையும் இங்கு செய்யப்பட்டன.

மேலும் கொத்து, பிரைட் ரைஸ், நூடுல்ஸ் போன்ற மூல உணவுகள் சுற்றுச்சூழலுக்கு வெளிப்படையாக காட்சிப்படுத்தப்பட்டு அதிக தூசி பெருகும் அபாயத்தில் காணப்பட்டன. என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்குக் கொடுப்பனவு நாளை முதல்

நிலவும் அனர்த்த நிலை மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு...

அர்ஜூனவும் கைதாவார் என அறிவிப்பு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்...

சிட்னி துப்பாக்கிச் சூடு: இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள்...

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலஞ்ச ஊழல்...