Date:

அஜித் நிவாட் கப்ரால் அமைச்சு, பராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளாரா?

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கி ஆளுனராக கடமையாற்றியதற்கான ஓய்வூதிய கொடுப்பனவை வழங்குமாறு கோரியதாக செய்திகள் வெளியாகியுள்ள போதிலும், இது தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், இந்த விடயம் குறித்து எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது.

இதன் போது, ‘இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கி ஆளுனராக கடமையாற்றியதற்கான ஓய்வூதிய கொடுப்பனவை வழங்குமாறு கோரியதாகவும், அந்த தொகை 19 இலட்சம் ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறெனில் அர்ஜூன் அலோசியசுக்கும் அதனை வழங்க வேண்டியேற்படுமே? ‘ என்று வினவிய போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

அதே போன்று இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் பதவி விலகி, மீண்டும் மத்திய வங்கி ஆளுனராக பதவியேற்கப் போவதாக வெளியாகியுள்ள செய்திகளும் உறுதிப்படுத்தப்பட்டவையல்ல என்றும் அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

தொடர்ந்து பெய்து வரும் கன மழையைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட மண்சரிவு...

350 மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை

பல மருந்து வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான வர்த்தமானி...

பொலிஸ் அதிகாரிகளுக்கு 7,000 ரூபா கொடுப்பனவு: அமைச்சரவை அனுமதி

பொலிஸ் அதிகாரிகளுக்காக 7,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக...

கட்டாரில் இருந்து நேரடியாக தேசிய அணியில் இணைந்து கொள்ளும் வியாஸ் காந்த்

பாகிஸ்தானில் நடைபெறும் டி20 முத்தரப்பு தொடருக்கான இலங்கையின் தேசிய ஆடவர் அணியில்...