Date:

அஜித் நிவாட் கப்ரால் அமைச்சு, பராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளாரா?

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கி ஆளுனராக கடமையாற்றியதற்கான ஓய்வூதிய கொடுப்பனவை வழங்குமாறு கோரியதாக செய்திகள் வெளியாகியுள்ள போதிலும், இது தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், இந்த விடயம் குறித்து எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது.

இதன் போது, ‘இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கி ஆளுனராக கடமையாற்றியதற்கான ஓய்வூதிய கொடுப்பனவை வழங்குமாறு கோரியதாகவும், அந்த தொகை 19 இலட்சம் ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறெனில் அர்ஜூன் அலோசியசுக்கும் அதனை வழங்க வேண்டியேற்படுமே? ‘ என்று வினவிய போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

அதே போன்று இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் பதவி விலகி, மீண்டும் மத்திய வங்கி ஆளுனராக பதவியேற்கப் போவதாக வெளியாகியுள்ள செய்திகளும் உறுதிப்படுத்தப்பட்டவையல்ல என்றும் அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைப்படம்! அதிர்ச்சியில் பாகிஸ்தான் மற்றும் ஏனைய நாடுகள்

அமெரிக்கா, இந்தியாவுடன் தனது வலுப்பெறும் மூலோபாய உறவுகளை வெளிப்படுத்தும் வகையில், ஜம்மு–காஷ்மீர்...

ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் ஊடாக,...

ரூ. 10,000 இற்கு மேல் பொருட்கள் வாங்கினால் காப்புறுதி இலவசம்!

கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10,000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களைக்...

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி அன்பளிப்பு

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும்...