Date:

அஜித் நிவாட் கப்ரால் அமைச்சு, பராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளாரா?

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கி ஆளுனராக கடமையாற்றியதற்கான ஓய்வூதிய கொடுப்பனவை வழங்குமாறு கோரியதாக செய்திகள் வெளியாகியுள்ள போதிலும், இது தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், இந்த விடயம் குறித்து எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது.

இதன் போது, ‘இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கி ஆளுனராக கடமையாற்றியதற்கான ஓய்வூதிய கொடுப்பனவை வழங்குமாறு கோரியதாகவும், அந்த தொகை 19 இலட்சம் ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறெனில் அர்ஜூன் அலோசியசுக்கும் அதனை வழங்க வேண்டியேற்படுமே? ‘ என்று வினவிய போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

அதே போன்று இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் பதவி விலகி, மீண்டும் மத்திய வங்கி ஆளுனராக பதவியேற்கப் போவதாக வெளியாகியுள்ள செய்திகளும் உறுதிப்படுத்தப்பட்டவையல்ல என்றும் அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வெளியேறுகை எச்சரிக்கை

கண்டி, நுவரெலியா, மாத்தளை, கேகாலை, குருநாகல் மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு 3ஆம்...

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607ஆக அதிகரித்தது

இன்று மாலை 6 மணிவரையான நிலவரப்படி, இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

2026 வரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் 157 மேலதிக...

பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல்...