Date:

மத்திய வங்கியில் மாயமான 50 இலட்சம் ரூபா பணம் – பல கோணங்களில் விசாரணை

மத்திய வங்கியில் காணாமல் போன 50 இலட்சம் ரூபா தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா இன்று (28) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மத்திய வங்கி உள்ளக விசாரணையை ஆரம்பித்துள்ளதுடன், பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

சம்பவம் தொடர்பில் தெளிவான விளக்கமொன்றை உரிய விசாரணைகளின் முடிவில் பெற்று, அதற்கு காரணமான தரப்பினரை வெளிப்படுத்த முடியும்.

தற்போது இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு மத்திய வங்கியின் ஆளுநர் பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடியுள்ளதுடன், விசாரணைகள் நிறைவடைந்தவுடன் சம்பவம் தொடர்பான அனைத்து தகவல்களையும் அறிவிப்பதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜனவரியில் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் பணவீக்கம்…

2026 ஜனவரி மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மற்றும் கொழும்பு நகர்ப்புற...

தேசிய குத்துச்சண்டை செம்பியன்ஷிப்பில் ஆட்டநிர்ணய சர்ச்சை!

தேசிய குத்துச்சண்டை செம்பியன்ஷிப் போட்டிகளில் ஆட்டநிர்ணயம் மற்றும் ஊழல் இடம்பெறுவதாக சுமத்தப்பட்ட...

ராஜித்தவுக்கு எதிரான முறைப்பாடு மீண்டும் விசாரணைக்கு

கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டமொன்றை கொரிய நிறுவனமொன்றுக்கு வழங்கியதன்...

அதிரடியாக குறைந்த தங்க விலை !

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, உள்நாட்டு தங்க விலைகள்...