Date:

மத்திய வங்கியில் மாயமான 50 இலட்சம் ரூபா பணம் – பல கோணங்களில் விசாரணை

மத்திய வங்கியில் காணாமல் போன 50 இலட்சம் ரூபா தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா இன்று (28) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மத்திய வங்கி உள்ளக விசாரணையை ஆரம்பித்துள்ளதுடன், பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

சம்பவம் தொடர்பில் தெளிவான விளக்கமொன்றை உரிய விசாரணைகளின் முடிவில் பெற்று, அதற்கு காரணமான தரப்பினரை வெளிப்படுத்த முடியும்.

தற்போது இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு மத்திய வங்கியின் ஆளுநர் பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடியுள்ளதுடன், விசாரணைகள் நிறைவடைந்தவுடன் சம்பவம் தொடர்பான அனைத்து தகவல்களையும் அறிவிப்பதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்குக் கொடுப்பனவு நாளை முதல்

நிலவும் அனர்த்த நிலை மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு...

அர்ஜூனவும் கைதாவார் என அறிவிப்பு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்...

சிட்னி துப்பாக்கிச் சூடு: இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள்...

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலஞ்ச ஊழல்...