Date:

ICC தடை தொடர்பில் வௌியான புதிய கதை!

இலங்கை கிரிக்கட் நிறுவனத்துடன் சர்ச்சையில் சிக்கிய விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி நீக்கியமை இலங்கை கிரிக்கெட் மீதான சர்வதேச கிரிக்கட் பேரவையின் தடையை நீக்குவதில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கிரிக்இன்போ இணையத்தளம் தெரிவித்துள்ளது.

அதேபோல், இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் மீது மேலும் அரசியல் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாம் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பில் இதுவரை எவ்வித உறுதிமொழியும் வழங்கவில்லை என கிரிக்இன்போ தெரிவித்துள்ளது.

ஆனால், இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளை அந்த பதவியில் இருந்து நீக்குவதற்கு கடுமையாக உழைத்த ரொஷான் ரணசிங்கவை நீக்கியிருப்பது, கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசாங்கம் இனி தலையிடாது என்பதற்கான அறிகுறியாக அமையும் என கிரிக்இன்போ இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...