Date:

ICC தடை தொடர்பில் வௌியான புதிய கதை!

இலங்கை கிரிக்கட் நிறுவனத்துடன் சர்ச்சையில் சிக்கிய விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி நீக்கியமை இலங்கை கிரிக்கெட் மீதான சர்வதேச கிரிக்கட் பேரவையின் தடையை நீக்குவதில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கிரிக்இன்போ இணையத்தளம் தெரிவித்துள்ளது.

அதேபோல், இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் மீது மேலும் அரசியல் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாம் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பில் இதுவரை எவ்வித உறுதிமொழியும் வழங்கவில்லை என கிரிக்இன்போ தெரிவித்துள்ளது.

ஆனால், இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளை அந்த பதவியில் இருந்து நீக்குவதற்கு கடுமையாக உழைத்த ரொஷான் ரணசிங்கவை நீக்கியிருப்பது, கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசாங்கம் இனி தலையிடாது என்பதற்கான அறிகுறியாக அமையும் என கிரிக்இன்போ இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இந்திய பட்ஜெட் 2026 – இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01) இந்திய பாராளுமன்றத்தில் 2026-27...

FCIDயில் ஷிரந்தி; CIDயில் நாமல்! – ஒரே திகதியில் அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 03...

யாழ்ப்பாணத்துக்கு வருகிறது உலகக் கிண்ணம்

ICC இருபதுக்கு 20 உலகக் கிண்ண சுற்றுப்பயணத்தின் ஓர் அங்கமாக, உலகக்...

நாளை முதல் கடும் தொழிற்சங்க போராட்டம்

தங்கள் அரசாங்கம் கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்கத் தவறியதால், நாளை (02) முதல்...