Date:

ICC தடை தொடர்பில் வௌியான புதிய கதை!

இலங்கை கிரிக்கட் நிறுவனத்துடன் சர்ச்சையில் சிக்கிய விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி நீக்கியமை இலங்கை கிரிக்கெட் மீதான சர்வதேச கிரிக்கட் பேரவையின் தடையை நீக்குவதில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கிரிக்இன்போ இணையத்தளம் தெரிவித்துள்ளது.

அதேபோல், இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் மீது மேலும் அரசியல் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாம் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பில் இதுவரை எவ்வித உறுதிமொழியும் வழங்கவில்லை என கிரிக்இன்போ தெரிவித்துள்ளது.

ஆனால், இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளை அந்த பதவியில் இருந்து நீக்குவதற்கு கடுமையாக உழைத்த ரொஷான் ரணசிங்கவை நீக்கியிருப்பது, கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசாங்கம் இனி தலையிடாது என்பதற்கான அறிகுறியாக அமையும் என கிரிக்இன்போ இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மத்தல விமான நிலையம் வரலாற்றுச் சாதனை

2025 ஆம் ஆண்டில் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் சாதனை...

புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனம்

இலங்கையின் புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று (5)...

இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல்: இந்தியா பதில்

இந்திய பிரஜைகளால் கடலில் இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக...

பாராளுமன்றில் ஐஸ்: சபாநாயகர் பணிப்பு

ஐஸ், போதைப்பொருளை பாராளுமன்ற  சேவையாளர்கள் பாவிப்பதாகவும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையை...