Date:

ஹமாஸை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் – போர் நிறுத்தத்துக்கு மத்தியில் இஸ்ரேல் பிரதமர் சூளுரை

காஸாவின் சில பகுதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளதை உணர்த்தும் விதத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அங்கு சென்றார்.

ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 50 நாட்களை கடந்துள்ளது. இதில் 4 நாட்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தனது அரசின் மூத்த அதிகாரிகள் சிலருடன் காஸாவிற்குள் நேற்று சென்றார்.

அங்குள்ள இஸ்ரேலிய வீரர்களிடம் நெதன்யாகு பேசினார். அப்போது அவர், “ஹமாஸ் இயக்கத்தை முற்றிலும் அழிக்கும் வரை போர் தொடரும். எனவே ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்” என்று உறுதியளித்தார்.

இதன்பின் இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”ஹமாஸை முற்றிலும் வீழ்த்துவது, ஹமாஸ் பிடித்துள்ள பணையக்கைதிகள் அனைவரையும் மீட்பது, காஸா எந்த விதத்திலும் இனி தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்பதை உறுதி செய்வது ஆகியவையே இந்த போரின் இலக்கு” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக, உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் என்ற போலிக்காரணத்தின்...

முன்னாள் ஜனாதிபதி ரணில் நீதிமன்றுக்கு..

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராவதற்காக முன்னாள்...

Breaking காஸாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம்!

காஸாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரமாக இடம்பெறுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...

கெஹெலியவின் வீட்டில் புதிய நீதிமன்றம்

புதிய 4 மேல் நீதிமன்றங்களை விரைவாக ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக,...