Date:

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்பு தெரிவித்து கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

டெலிகொம் வளங்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் தற்போது கொழும்பில் உள்ள டெலிகொம் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக நடத்தப்பட்டு வருகின்றது.

இதன்போது, ஊழியர்களது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், அவர்களது வரப்பிரசாதங்கள் அவர்களுக்கு முறையாக வழங்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்களால் கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இதேவேளை, போராட்டக்களத்தில் பெருமளவான பொலிஸார், கலகத் தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் நீர்த்தாரைப் பிரயோக வண்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு யாழ்ப்பாணம் தொடக்கம் காலி வரையான நாட்டின் அனைத்து பாகங்களிலும் பணியாற்றும் டெலிகொம் ஊழியர்கள் வருகைத் தந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

83வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வரலாற்று இரட்டை வெற்றியை வென்ற இலங்கை விமானப்படை!

83வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2025, கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில்...

வெலிசரையில் புதிய சிறைச்சாலை!

சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை குறைத்துக் கொள்வதற்கு வெலிசறை பகுதியில் புதிய சிறைச்சாலையை...

வைத்தியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கின்றது

  அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும் (24)...

கொழும்பு இந்துக் கல்லூரியில் நடைபெற்ற “பவளப் பொங்கல் 2026”

இலங்கையின் முன்னணித் தமிழ் பாடசாலைகளில் ஒன்றான இந்துக் கல்லூரி கொழும்பு, தனது...