Date:

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் 798 குடும்பங்களை சேர்ந்த 2930 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது

தொடர் மழையினால் நீர் நிலைகள் நிரம்பி வழிவதுடன் தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது

ஊவா மாகாணம் பதுளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 172 குடும்பங்களைச்சேர்ந்த 556 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

தென் மாகாணம் மாத்தறை மாவட்டத்தில் 4 குடும்பங்களை சேர்ந்த 21 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

கேகாலையில் 26 குடும்பங்களை சேர்ந்த 92 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 30 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் 62 குடும்பங்களை சேர்ந்த 233 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 44 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது

மத்திய மாகாணம் கண்டி மாவட்டத்தில்  21 குடும்பங்களை சேர்ந்த 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 17வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

50 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் 1 மரணம் நிகழ்ந்துள்ளது

மாத்தளை மாவட்டத்தில் 22 குடும்பங்களை சேர்ந்த 86 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு 50 நபர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கபட்டுள்ளனர்

வட மாகாணம் யாழ் மாவட்டத்தில் 2  குடும்பங்களை சேர்ந்த 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது

வடமேல் மாகாணம் குருனாகல் மாவட்டத்தில் 708 குடும்பங்களை சேர்ந்த 2591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 116 வீடுகள் பகுதியளவிலும் 3 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளது 639 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

83வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வரலாற்று இரட்டை வெற்றியை வென்ற இலங்கை விமானப்படை!

83வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2025, கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில்...

வெலிசரையில் புதிய சிறைச்சாலை!

சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை குறைத்துக் கொள்வதற்கு வெலிசறை பகுதியில் புதிய சிறைச்சாலையை...

வைத்தியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கின்றது

  அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும் (24)...

கொழும்பு இந்துக் கல்லூரியில் நடைபெற்ற “பவளப் பொங்கல் 2026”

இலங்கையின் முன்னணித் தமிழ் பாடசாலைகளில் ஒன்றான இந்துக் கல்லூரி கொழும்பு, தனது...