Date:

பொதுமக்களுக்கு இலங்கை மின்சார சபை விடுத்துள்ள வேண்டுகோள்

மின் பாவனையாளர்களிடம் இ – மின் கட்டண சேவைக்கு பதிவு செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அறிவித்தலில் இதனை தெரிவித்துள்ளது.

அச்சிடப்பட்ட கட்டணப் பட்டியல்களை முற்றிலுமாக நிறுத்துவதே இச்சேவையின் முதன்மையான நோக்கமாகும் என மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

அறிவிப்பில் மேலும் குறிப்பிடுகையில், இ – மின் கட்டண சேவையை பெற்றுக்கொள்ள ebill.ceb.lk இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்ய முடியும்.

இல்லாவிடின், 1987 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்புவதன் மூலமும் சேவையில் பதிவு செய்து கொள்ளலாம்.  அதற்கு, 1987 என்ற எண்ணுக்கு உங்கள் தொலைபேசி எண்ணுடன் EBILL மின்சாரக் கணக்கு எண் மின்னஞ்சல் முகவரி என குறுந்தகவலை (SMS) அனுப்ப வேண்டும்.

தற்போது தெஹிவளை, களனி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பிரதேசங்களிலும், மாத்தறை மற்றும் அம்பலாங்கொட பிரதேசங்களிலும் மட்டுமே EBILL வழங்கப்படுகின்றன.

எதிர்வரும் சில மாதங்களுக்குள் நாடளாவிய ரீதியில் உள்ள மின்சார பாவனையாளர்களுக்கு சேவையை வழங்குவதே இலக்கு என இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறை ரத்து

அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை (17) முதல் அனைத்து...

நாட்டில் இருந்து 20 சதவீத பொறியியலாளர்கள் வௌியேற்றம்

கடந்த சில ஆண்டுகளாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்களில் சுமார் 20...

பொலிஸ் விசேட சுற்றிவளைப்பில் மேலும் பலர் கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல்...

தபால் ஊழியர்கள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பில்

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க...