Date:

கொழும்பில் மற்றுமொரு மரம் முறிந்து வீழ்ந்தது

மோசமான வானிலை காரணமாக கொழும்பு ஆர்.ஏ. டிமெல் அவென்யூவில் மற்றொரு மரம் விழுந்ததில் ஒருவர் காயமடைந்து வைத்தியசபலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (07) மாலை குறித்த மரம் கார் மற்றும் முச்சக்கரவண்டி மீது விழுந்ததில், பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி கொழும்பு ஆர்.ஏ. டிமெல் அவென்யூவில் பஸ் மீது மரம் விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.

மேலும், அக்டோபர் 30 ஆம் திகதி அதே வீதியில் மற்றொரு மரம் விழுந்ததில் 3 வாகனங்கள் சேதமடைந்தன.

இந்த பாதுகாப்பற்ற நிலை குறித்து கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் திருமதி பத்ராணி ஜயவர்தனவிடம் நாம் வினவிய போது,

நேற்றைய மோசமான வானிலை காரணமாக கொழும்பில் 36 மரங்கள் மற்றும் கிளைகள் முறிந்து வீழ்ந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆபத்தான மரங்களை அடையாளம் காணும் இயந்திரம் கொழும்பு மாநகர சபையிடம் இருந்தாலும் அதனை பயன்படுத்துவதற்கு ஆள் இல்லை என மாநகர ஆணையாளர் திருமதி பத்ராணி ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கடத்தப்பட்ட பாடசாலை சிறுவன், வெள்ளை வேனில் இருந்து குதித்து தப்பி வந்தான்

கஹதுடுவ பகுதியில் வைத்து வெள்ளை வேனில் கடத்தப்பட்ட  15 வயதுடைய சிறுவன்...

இலங்கையின் ஏற்றுமதிகளில் 70 முதல் 80 சதவீதம் வரை வரிகள் இல்லாமல்

இலங்கையின் ஏற்றுமதிகளில் 70 முதல் 80 சதவீதம் வரை வரிகள் இல்லாமல்...

புதிய கல்விச் சீர்திருத்தம் – வரலாறு, அழகியல், தொழில்சார் பாடங்கள்..

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி...

City of Dreams Sri Lanka ஆரம்ப விழா சிறப்பு விருந்தினர் பங்கேற்பில் திடீர் மாற்றம்

தெற்காசியாவின் முதலாவது ஒருங்கிணைந்த உல்லாச விடுதியான City of Dreams Sri...