Date:

தொடர் மழை நானுஓயாவிலும் வெள்ளம் வீடுகள் விவசாய நிலங்கள் பாதிப்பு

மலையக நிருபர் –  செ.திவாகரன் டி.சந்ரு

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாகவும் மாவட்டத்தின் பல பாகங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ள காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது

இடைவிடாது பெய்து வரும் கடும் மழை காரணமாக வெள்ளபெருக்குடன் சிறு சிறு மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக 476/ஏ கிரிமிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் டெஸ்போட் , கிரிமிட்டி , கிளாரண்டன் போன்ற பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கத்தால் விவசாய நிலங்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

எனினும் மரக்கறி தோட்டங்களில் வெள்ளம் பாய்ந்தோடியதால், பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிகமாக நானுஓயா கிளாரண்டன் மற்றும் டெஸ்போட் பகுதிகளில் சனிக்கிழமை (04) பிற்பகல் வேளையில் பெய்த அடை மழை காரணமா அதிகளவான மரக்கறி தோட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் வெள்ளம் ஏற்பட்டமை விவசாய காணிகள் மூழ்குவதற்கு முக்கிய காரணம் என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மட்டக்குளியில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது

மட்டக்குளிய சமித் பகுதியில் T-56 துப்பாக்கியை வைத்திருந்த மட்டக்குளியவைச் சேர்ந்த 36...

நாளை முதல் சில பகுதிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள ரயில் சேவைகள்

பொசன் பண்டிகையை முன்னிட்டு ரயில் திணைக்களம் விசேட ரயில் சேவைகளை இயக்கவுள்ளதாக...

அதிகரிக்கப்படும் சீமெந்து மூட்டையின் விலை?

50 கிலோ சீமெந்து மூட்டையின் விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக...

மரைன் டிரைவ் வீதியோர உணவு விற்பனைநிலையங்கள் மீது நடவடிக்கை

மரைன் டிரைவில் இயங்கும் பல வீதியோர உணவு விற்பனை நிலையங்கள், சரியான...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373