Date:

கிரிக்கெட் ரசிகர்களின் அதிரடி தீர்மானம்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூக வலைத்தளங்களின் ஊடாக, இந்த போராட்டத்திற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த போராட்டம் நாளை முற்பகல் 10 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி படுதோல்வியை எதிர்நோக்கிய நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடாத்தப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயற்பாடுகளுக்கு தமது அதிருப்தியை வெளியிடும் வகையில் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்யும் சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வெலிசரையில் புதிய சிறைச்சாலை!

சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை குறைத்துக் கொள்வதற்கு வெலிசறை பகுதியில் புதிய சிறைச்சாலையை...

வைத்தியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கின்றது

  அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும் (24)...

கொழும்பு இந்துக் கல்லூரியில் நடைபெற்ற “பவளப் பொங்கல் 2026”

இலங்கையின் முன்னணித் தமிழ் பாடசாலைகளில் ஒன்றான இந்துக் கல்லூரி கொழும்பு, தனது...

ஜொலிக்கப் போகும் ராகம நகரம்..!

ராகம நகரத்தை மையமாகக் கொண்டு பல்வகை போக்குவரத்து மத்திய நிலையம் ஒன்றை...