Date:

கொழும்பில் ஆபத்து ?

கொழும்பு நகர மக்களுக்கு ஆபத்தான மரங்களை அகற்றும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதற்காக மாநகர சபை ஊழியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகர சபை ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன  தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரில் அபாயகரமான 300 மரங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் தலையீட்டில் மரங்களை அகற்றும் வேலைத்திட்டத்திற்கான பயிற்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி கொள்ளுப்பிட்டியில் பேருந்து மீது மரம் முறிந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்து தொடர்பான விசாரணையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொழும்பு மரங்களை ஆய்வு செய்வதற்காக பேராதனை தாவரவியல் பூங்காவில் இருந்து நிபுணத்துவ பரிசோதகர் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மரத்திற்கு மரம் சென்று மரங்களை பார்வையிடுவார் எனவும் ஆணையாளர் குறிப்பிட்டார்.

மேலும், நகராட்சியில் கணிசமான அளவு மரம் வெட்டும் கருவிகள் இருப்பதாகவும், தேவைப்பட்டால், தனியார் துறையை தொடர்பு கொண்டு, அதற்கான உதவிகளை பெறுவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பலஸ்தீன் மக்களின் உரிமைகளுக்காக முன் நிற்போம்

திசைகாட்டி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகள் இன்று வெறும் புஸ்வாணமாகிவிட்டன என எதிர்க்கட்சித்...

சமூக ஊடகங்களில் பரவிவரும் சிறி தலதா வழிபாட்டு புகைப்படம் குறித்து விசாரணை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் 'சிறி தலதா வழிப்பாட்டு'...

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான அறிக்கை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373