Date:

அஸ்வெசும திட்டம் தொடர்பில் புதிய தீர்மானம்

அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அஸ்வெசும வாரத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நவம்பர் 6ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை அஸ்வெசும பயனாளிகளாக தகுதி பெற்ற குடும்பங்கள், இதுவரையில் பலன்களைப் பெறாத குடும்பங்களுடன், தொழில்நுட்பக் கோளாறால் உதவித்தொகை தாமதமாகியுள்ளமை குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

மேலும், அஸ்வெசும பயனாளிகளுக்கான ஓகஸ்ட் மாதத்திற்கான கொடுப்பனவு நடவடிக்கைகள் நாளை (01) முதல் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

“தற்போது, ​​ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகளை வழங்கியுள்ளோம். அடுத்ததாக, நிதியமைச்சு, திறைசேரி மூலம் 8.5 பில்லியன் ரூபாவை 1,365,000 பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கும். அதன்படி, புதன்கிழமை முதல் பயனாளிகள் அவர்களின் பலன்களைப் பெற முடியும்.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கொழும்பில் போராட்டம்

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காமையினால், இன்று (02) முற்பகல்...

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பம்

வாக்காளர் பெயர்ப்பட்டியல் திருத்தப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன்,...

பாரம்பரியம் மிளிர அரங்கேறிய லயன்ஸ் மாவட்ட 306 D3-இன் “தைப்பொங்கல் விழா 2026”

லயன்ஸ் சர்வதேச மாவட்ட 306 D3 இன் ஏற்பாட்டில், தமிழர்களின் பாரம்பரிய...

மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த வௌ்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் சுமார் 200...