Date:

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடாளாவிய ரீதியில் இன்று போராட்டங்கள்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இன்று (திங்கட்கிழமை) மற்றும் நாளைய தினமும் நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த போராட்டமானது தமது வாகனங்களுக்கு வழங்கப்படுகின்ற எரிபொருளின் அளவை அதிகரித்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை, அரச மற்றும் மாகாண அரச சேவையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய வருகின்ற வரவுசெலவு திட்டத்தில் 20 ஆயிரம் ரூபாய் மேலதிக கொடுப்பனவு அல்லது வேதன அதிகரிப்பை கோரி இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறித்த தொழிற்சங்க கூட்டமைப்பின் இணைப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கெஹெலியவின் உறவினரான பண்டார ரம்புக்வெல்ல கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினரான பண்டார ரம்புக்வெல்ல, இலஞ்ச அல்லது...

இன்று இடியுடன் கூடிய மழை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் மாத்தளை...

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கொழும்பில் போராட்டம்

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காமையினால், இன்று (02) முற்பகல்...

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பம்

வாக்காளர் பெயர்ப்பட்டியல் திருத்தப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன்,...