Date:

சிஐடி மீது தாக்குதல் நடத்த திட்டம் – முன்னாள் கொமாண்டோக்கள் களமிறக்கம்! வெளியான பயங்கர தகவல்கள்….!

தற்கொலைப் பயங்கரவாதிகளுக்கு நிகரான தாக்குதலை நடத்தி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகிய இருவரையும் மீட்பதற்கான திட்டம் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று முன்தினம் (24) கோட்டை நீதவான் நீதிமன்றித்திற்கு அறிவித்திருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு முன்னாள் கமாண்டோக்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது 90 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹரக் கட்டா என்ற நந்துன் சிந்தகா மற்றும் குடு சலிந்து என்ற சலிந்து மல்ஷிகா தொடர்பில் கிடைத்த புலனாய்வு தகவலுக்கு அமைய இந்த விடயம் வௌியாகியுள்ளது.

இந்த சூட்சுமமான திட்டத்திற்கு பங்களிப்பு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவத்தின் முன்னாள் கொமாண்டோ உறுப்பினர்கள் இருவரின் ஒலி நாடாவும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த இரண்டு கொமாண்டோக்களும் ஒழுக்காற்று அடிப்படையில் இராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த இரண்டு கமாண்டோக்களும், குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்குள் பொலிஸ் சீருடை அணிந்து சுயநினைவற்ற நச்சுப் புகையைப் பயன்படுத்தி பிரவேசிக்க தயாராகி இருந்ததாக விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

இதற்கு படையினர் தாக்குதல் நடத்தும் வகையில் ஆறு பேர் கொண்ட குழுவொன்று தயாராக இருந்ததாகவும் கூறியுள்ளனர்.

முன்பு திட்டமிட்டவாறு ஹரக் கட்டாவின் நெருங்கிய உறவினரான வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள மிதிகம சுட்டி, ஹரக் கட்டாவையும் குடு சலிந்துவையும் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திலுருந்து மீட்பதற்காகவே இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பிரபுக்கள் பாதுகாப்பு குழுவொன்றையும் ஈடுபடுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செயலிழந்திருந்த சிசிடிவி கெமரா அமைப்பும் இதன் காரணமாக மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க அங்கிகாரம்

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில்...

குரங்கினால் மின்சார தடை? PUCSL இன் பகிரங்க விசாரணை ஆரம்பம்

இலங்கை மின்சார சபையின் பாணந்துறை கிரிட் துணை மின்நிலையத்தின் மின்மாற்றி அமைப்பில்...

பாலஸ்தீனத்தை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் இலங்கையில் ஆரம்பம்

இரு அரசு தீர்வை செயல்படுத்துவது உட்பட, பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க உள்நாட்டிலும் சர்வதேச...

யானையிடம் இருந்து தப்பிய 3 வயது குழந்தை

மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழவெட்டுவான் பகுதியில் யானைத் தாக்குதலில் 35...