Date:

வழக்கு விசாரணைக்கு சென்ற பெண் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் – சந்தேக நபர் தப்பியோட்டம்..!

ஹோமாகம நீதவான் நீதிமன்றில் நேற்று (25) இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு சென்ற பெண்ணொருவரின் கழுத்தை கூரிய ஆயுதத்தால் அறுத்துவிட்டு தப்பி ஓடிய நபரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த பெண் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது நிலைமை மோசமாக இல்லை எனவும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.

தனது வீட்டில் இருந்து ஐந்து பவுண் தங்கப் நகைகளை காணவில்லை என தனது சகோதரன் சந்தேகிப்பதாக பெண் பாதுக்க பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த பெண் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு ஆஜராக வந்துள்ளார்.

வீட்டுக்குச் செல்வதற்காக நீதிமன்றத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஏறிச் செல்ல முற்பட்ட போது முச்சக்கரவண்டியில் வந்த நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் கழுத்தில் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பூகொட பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய பெண்ணே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15)...

இன்று முதல் வானிலையில் மாற்றம்

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை இன்று முதல் (15) குறைவடையும் என...

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி தீர்மானம்!

2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு...

பால் மாவின் விலை குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக...