Date:

இலங்கையில் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து..! வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையர்கள் பலர் சிறுவர்களின் பாலியல் காட்சிகள் அடங்கிய காணொளிகளை சமூக ஊடகங்களில் பணத்திற்கு விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது.

சிறுவர்களை கையாளும் சர்வதேச அமைப்பு, சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேராவிடம் பணியகம் நேற்று தெரிவித்துள்ளது.

இலங்கையர்கள் பலர் வாட்ஸ்அப் குழுவில் அங்கம் வகித்து சிறுவர்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விநியோகித்து வருவதாக பணியகம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

2, 3, 5 மற்றும் 7வயதுக்குட்பட்ட சிறுவன் மற்று சிறுமிகளின் பாலியல் மற்றும் ஆபாச காட்சிகள் அடங்கிய நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் 1000, 2000 மற்றும் 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களால் ஆபாசமான காணொளிகளை பகிர்ந்தமை தொடர்பில் விசாரணைக்கு தேவையான பல உத்தரவுகளை பிறப்பிக்குமாறு பணியகம் நீதிமன்றத்திடம் கோரியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சம்பத் மனம்பேரிக்கு தடுப்புக்காவல்

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் நீதிமன்றில் சரணடைந்த சந்தேகநபரான சம்பத் மனம்பேரியை...

(SJB) உறுப்பினர்கள் மீதான தடையை நீக்கியது (UNP)

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான...

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மக்களுக்கு வழங்கிய மகிழ்ச்சியான செய்தி

2022-2023 பொருளாதார நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட சமூக துயரமும் தற்செயலானவை அல்ல...

சுகயீன விடுமுறையில் குதித்த மின்சார சபை ஊழியர்கள்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று (17) சுகயீன விடுமுறையை அறிவித்து,...