Date:

கிரிக்கெட் வீரர் தனுஷ்கவின் தடை தொடர்பில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு.

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் பின்னர் தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அதன்பின்னர் தனுஸ்க குணதிலக மீது பாலியல் குற்றச்சாட்டு வழக்கு தொடரப்பட்ட நிலையில் இலங்கை கிரிக்கெட் சபை நவம்பர் 2022 இல் தனுஷ்காவுக்கு எதிராக கிரிக்கெட் தடையை விதித்தது.

எவ்வாறாயினும் குறித்த வழக்கு தொடர்பாக ஆஸ்திரேலியாவில் நடந்த விசாரணைகளுக்கு பின்னர் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து தனுஸ்க குணதிலக்க நாடு திரும்பியுள்ள நிலையில் அவர் மீது விதிக்கப்பட்டிருந்த கிரிக்கெட் தடையை நீக்குவதற்கு இலங்கை கிரிகெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா கிரிக்கட் நியமித்த சுயாதீன விசாரணைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல்...

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...