Date:

நானுஓயாவில் மண் சரிவு – போக்குவரத்து பாதிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையைத் தொடர்ந்து
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதி ஆரம்பமாகும் லேங்டல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் அந்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த வீதியின் ஒரு மருங்கில் மாத்திரம் போக்குவரத்து இடம்பெறுவதாகவும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர், மண் மேட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர் .

எனினும் நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் பல இடங்களில் மண்சரி ஏற்படுவதற்கு அபாயகரமான வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால் அப்பாதையில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறும் , தொடர்ச்சியான சீரற்ற வானிலை காரணமாக அடிக்கடி கடும் பனி மூட்டம் நிறைந்து காணப்படுவதனால் பிரதான வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

செ.திவாகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

83வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வரலாற்று இரட்டை வெற்றியை வென்ற இலங்கை விமானப்படை!

83வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2025, கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில்...

வெலிசரையில் புதிய சிறைச்சாலை!

சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை குறைத்துக் கொள்வதற்கு வெலிசறை பகுதியில் புதிய சிறைச்சாலையை...

வைத்தியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கின்றது

  அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும் (24)...

கொழும்பு இந்துக் கல்லூரியில் நடைபெற்ற “பவளப் பொங்கல் 2026”

இலங்கையின் முன்னணித் தமிழ் பாடசாலைகளில் ஒன்றான இந்துக் கல்லூரி கொழும்பு, தனது...