Date:

காசாவில் பொதுமக்கள் செல்லும் வாகனங்கள் மீது தாக்குதல்

  வடக்கு காசா பகுதியில் இருந்து புறப்பட்ட வாகனத் தொடரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பிபிசி அறிக்கையின்படி, வடக்கு காசா பகுதியிலிருந்து வெளியேறும் பொதுமக்களின் வாகனத் தொடரணி மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த காட்சிகளையும் பிபிசி பதிவேற்றம் செய்துள்ளது.

இத்தாக்குதலில் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலால் பல வாகனங்கள் சேதமடைந்து எரிந்த நிலையில் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

காஸா நகரின் புறநகர்ப் பகுதியில் இருந்து தெற்கே சில கிலோமீட்டர் தொலைவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 500ஐ கடந்துள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 2 ஆயிரத்து 215 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல், பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 569 ஆக அதிகரித்துள்ளது.   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.   இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை...

அதிரடியாக பிள்ளையானின் சாரதியும் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதியை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது...

வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை நாளை (19) அவதானம் செலுத்த வேண்டிய...

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்

மியான்மரில், வெள்ளிக்கிழமை (18) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2.57 மணியளவில் (இலங்கை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373