Date:

காசாவில் பொதுமக்கள் செல்லும் வாகனங்கள் மீது தாக்குதல்

  வடக்கு காசா பகுதியில் இருந்து புறப்பட்ட வாகனத் தொடரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பிபிசி அறிக்கையின்படி, வடக்கு காசா பகுதியிலிருந்து வெளியேறும் பொதுமக்களின் வாகனத் தொடரணி மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த காட்சிகளையும் பிபிசி பதிவேற்றம் செய்துள்ளது.

இத்தாக்குதலில் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலால் பல வாகனங்கள் சேதமடைந்து எரிந்த நிலையில் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

காஸா நகரின் புறநகர்ப் பகுதியில் இருந்து தெற்கே சில கிலோமீட்டர் தொலைவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 500ஐ கடந்துள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 2 ஆயிரத்து 215 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல், பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 569 ஆக அதிகரித்துள்ளது.   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு இந்துக் கல்லூரியில் நடைபெற்ற “பவளப் பொங்கல் 2026”

இலங்கையின் முன்னணித் தமிழ் பாடசாலைகளில் ஒன்றான இந்துக் கல்லூரி கொழும்பு, தனது...

ஜொலிக்கப் போகும் ராகம நகரம்..!

ராகம நகரத்தை மையமாகக் கொண்டு பல்வகை போக்குவரத்து மத்திய நிலையம் ஒன்றை...

அனுஷ பெல்பிட்ட கைது!

முன்னாள் அமைச்சின் செயலாளரும் பணிப்பாளர் நாயகமுமான அனுஷ பெல்பிட்ட, இலஞ்சம் மற்றும்...

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட...