Date:

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சை திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவதற்காக பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல முடியாத மாணவர்கள், அந்தந்தப் பகுதிகளில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு அறியப்படுத்துமாறு பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சையை சுமுகமாக நடத்துவதற்கு அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் ஒத்துழைப்பை எதிர்ப்பார்த்துள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் எச்.ஜே.எம்.சி ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அனர்த்த நிலைமைகளால் சில மாவட்டங்களில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அது தொடர்பிலும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் குறித்தும் தொடர்ந்தும் அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது.

எனவே, அனர்த்த முகாமைத்துவ மையத்துடன் இணைந்து, பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் எச்.ஜே.எம்.சி ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மட்டக்குளியில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது

மட்டக்குளிய சமித் பகுதியில் T-56 துப்பாக்கியை வைத்திருந்த மட்டக்குளியவைச் சேர்ந்த 36...

நாளை முதல் சில பகுதிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள ரயில் சேவைகள்

பொசன் பண்டிகையை முன்னிட்டு ரயில் திணைக்களம் விசேட ரயில் சேவைகளை இயக்கவுள்ளதாக...

அதிகரிக்கப்படும் சீமெந்து மூட்டையின் விலை?

50 கிலோ சீமெந்து மூட்டையின் விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக...

மரைன் டிரைவ் வீதியோர உணவு விற்பனைநிலையங்கள் மீது நடவடிக்கை

மரைன் டிரைவில் இயங்கும் பல வீதியோர உணவு விற்பனை நிலையங்கள், சரியான...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373